சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்இதய ஆஞ்சியோகிராம்

இதய ஆஞ்சியோகிராம்

இதய ஆஞ்சியோகிராம் என்றால் என்ன?

இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய தமனிகள் எனப்படும் உங்கள் இதயத்தின் இரத்த நாளங்களைப் பார்க்க எக்ஸ்ரே படங்களைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும். இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைப் பார்க்க பரிசோதனை செய்யப்படுகிறது.

இதய ஆஞ்சியோகிராம்கள் என்பது இதய சிலாகையேற்றல் (Cardiac Catheterizations) எனப்படும் சர்வதேச சிகிச்சை முறைகளின் ஒரு பகுதியாகும். இதய சிலாகையேற்றல் சிகிச்சை முறைகள் என்பவை இதயம் மற்றும் இரத்த நாள நிலைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் இரண்டுமாக இருக்கலாம். இதயத்தின் நிலைமைகளைக் கண்டறிய உதவும் இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய சிலாகையேற்றல் செயல்முறையின் மிகவும் பொதுவான வகையாகும்.

இதய ஆஞ்சியோகிராம் செய்யும் போது, ஒரு எக்ஸ்ரே இயந்திரத்தால் கண்டறியக்கூடிய ஒரு சாய வகையானது உங்கள் இதயத்தின் இரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகிறது. எக்ஸ்ரே இயந்திரமானது இரத்த நாளங்களைப் பற்றிய விவரமான தோற்றமளிக்கும் படங்களை (ஆஞ்சியோகிராம்கள்)விரைவாக எடுக்கிறது. தேவைப்பட்டால், இதய ஆஞ்சியோகிராம் செய்யப்படும் அதே நேரத்தில் உங்கள் மருத்துவர் அடைபட்ட இதய தமனிகளை (ஆஞ்சியோபிளாஸ்டி) திறக்க முடியும்.

இதய ஆஞ்சியோகிராம்

இதய ஆஞ்சியோகிராம் ஏன் செய்யப்படுகிறது?

உங்களுக்கு இதய ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதற்கான சில பொதுவான காரணங்கள்:

நெஞ்சு வலி (ஆஞ்சினா) போன்ற இதயத் தமனி நோயின் அறிகுறிகள்

பிற பரிசோதனைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் மார்பு, தாடை, கழுத்து அல்லது கைகள் ஆகியவற்றில் வலி காணப்படுதல்

புதிய அல்லது அதிகமான மார்பு வலி (நிலையற்ற ஆஞ்சினா)

உங்கள் பிறப்பிலேயே காணப்படும் இதயக் கோளாறு (பிறவி இதய நோய்)

வெட்டுக்கள் இல்லாமல் இதய அழுத்த பரிசோதனையில் கிடைக்கும் அசாதாரண முடிவுகள்

பிற இரத்த நாள பிரச்சினைகள் அல்லது மார்புக் காயம்

அறுவை சிகிச்சை தேவைப்படும் இதய வால்வுப் பிரச்சினை

பரிசோதனையின் கடுமையான தன்மை காரணமாக, எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் அல்லது மன அழுத்த சோதனை போன்ற வெட்டுக்கள் போடப்படாத இதய பரிசோதனைகள் செய்யப்படும் வரை ஆஞ்சியோகிராம்கள் பொதுவாக செய்யப்படுவதில்லை.

நீங்கள் எவ்வாறு தயாராகிறீர்கள்?

ஒரு சில சூழ்நிலைகளில், இதய ஆஞ்சியோகிராம் ஆனது அவசரநிலையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், அவை முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது, தயாராவதற்கு உங்களுக்கு நேரம் கொடுக்கிறது.

ஆஞ்சியோகிராம் ஆனது ஒரு மருத்துவமனையின் சிலாகையேற்றல் (cath) ஆய்வகத்தில் செய்யப்படுகிறது. உங்கள் மருத்துவ பராமரிப்புக் குழுவினர் உங்களுக்கு குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்குவார்கள் மற்றும் நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்ட எந்த மருந்துகளையும் பற்றி உங்களுடன் பேசுவார்கள்.

பொதுவான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

உங்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவுக்குப் பிறகு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.

உங்கள் மருந்துகள் அனைத்தையும் உங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் வழக்கமான மருந்துகளை எடுக்கலாமா வேண்டாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்

உங்கள் மருந்துகள் அனைத்தையும் உங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் வழக்கமான மருந்துகளை எடுக்கலாமா வேண்டாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்வதற்கு முன் இன்சுலின் அல்லது வாய்வழியாக உட்கொள்ளும் பிற மருந்துகளை எடுக்கலாமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், உங்கள் மருத்துவரிடம் அதை தெரிவிக்க வேண்டும். நீங்கள் முன்பு ஏற்கனவே நரம்பு வழியாக செலுத்தப்படும் மாறுபாடான பொருளினால் (சிறுநீரக எக்ஸ்ரேக்கள் மற்றும் சி.டி ஸ்கேன்களுக்குப் பயன்படுத்தப்படும் சாயம்) பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவரிடம் இது குறித்தும் சொல்ல வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சையானது பொதுவாக கை அல்லது இடுப்பிலுள்ள பெரிய தமனியைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை சவரன் செய்வதற்கு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும், மேலும் பயத்தைப் போக்க உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படலாம்.

இந்த அறுவை சிகிச்சையானது பொதுவாக கை அல்லது இடுப்பிலுள்ள பெரிய தமனியைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை சவரன் செய்வதற்கு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும், மேலும் பயத்தைப் போக்க உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படலாம்.

குழுவினர் ஒரு உடல் பரிசோதனை செய்து, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு போன்ற உங்கள் முக்கிய அறிகுறிகளை பார்ப்பார்கள்.

நீங்கள் நன்றாக சிறுநீர் கழிக்கப்பட்டு, மருத்துவமனை உடைக்கு மாற்றப்படுவீர்கள். கான்டாக்ட் லென்ஸ்கள், கண்கண்ணாடிகள், நகைகள் மற்றும் ஹேர்பின்கள் ஆகியவற்றை நீங்கள் நீக்க வேண்டியதிருக்கும்.

ஆஞ்சியோகிராம் செய்யும் போது என்ன நடக்கும்?

ஆஞ்சியோகிராம் செயல்முறைக்கு விளக்கமளித்த பிறகு அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி/பராமரிப்பாளரிடம் ஒப்புதல் பெறப்படுகிறது.

எக்ஸ்ரே மேஜையில் மல்லாந்து படுக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். உங்கள் கையில் ஒரு நரம்புக்குள் ஊசி குத்தப்படும், இதன்மூலம் இதயநோய் நிபுணர் உங்களுக்கு மயக்க மருந்து அல்லது வலி நிவாரணி மருந்துகளை செலுத்துவார். உங்கள் மார்பு மற்றும் விரலில் ஒரு கண்காணிப்பு சாதனம் இணைக்கப்படும் மற்றும் உங்கள் மூக்கில் உள்ள சிறிய குழாய்கள் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்படும்.

செருகும் இடத்திற்கு அருகிலுள்ள தோல், அநேகமாக கை அல்லது இடுப்பிலுள்ள தோல் பகுதியானது கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்படும், அதன்பின் உங்கள் உடலின் எஞ்சிய பகுதிகள் தியேட்டர் துண்டினால் மூடப்படும்.

சாதாரண மயக்க மருந்து காரணமாக தமனிக்கு மேலேயுள்ள தோல் மற்றும் ஆழமான திசுக்கள் உணர்ச்சியற்றவையாக இருக்கும் மற்றும் ஒரு ஊசி தமனிக்குள் செலுத்தப்படும். இது சரியாக செலுத்தப்பட்டுள்ளது என்று இதயநோய் நிபுணர் திருப்தி அடைந்ததும், ஊசி வழியாக ஒரு வழிகாட்டி கம்பி தமனிக்குள் வைக்கப்படுகிறது. அதன்பின் ஊசி திரும்ப எடுக்கப்படுகிறது, இது வடிகுழாய் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக் குழாயை கம்பியின் மேல் வைத்து தமனிக்குள் வைக்க உதவுகிறது.

மெல்லிய குழாய் மற்றும் கம்பி ஆகியவை சரியான நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை இதயநோய் நிபுணர் எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி உறுதிசெய்கிறார், அதன்பின் கம்பி திரும்ப எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதன்பின் மாறுபட்ட ஊடகமான ஒரு சிறப்புச் சாயமானது மெல்லிய குழாய் வழியாக செலுத்தப்படுகிறது மற்றும் எக்ஸ்ரேக்கள் எடுக்கப்படுகின்றன. எக்ஸ்ரே படங்களில் சாயத்தை எளிதாகப் பார்க்கலாம். இது உங்கள் இரத்த நாளங்கள் வழியாக செல்லும் போது, உங்கள் மருத்துவர் அது ஓடுவதைக் கவனித்து, ஏதேனும் அடைப்புகள் அல்லது சுருங்கிய பகுதிகள் இருக்கின்றனவா என்பதை கண்டறிவார்.

உங்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்யு போது உங்கள் மருத்துவர் கண்டுபிடிப்பதைப் பொறுத்து, ஒரே நேரத்தில் பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது குறுகலான தமனியைத் திறக்க ஸ்டென்ட் வைத்தல் போன்ற கூடுதல் குழாய் வைக்கும் முறைகள் உங்களுக்கு செய்யப்படலாம்.

இதய மருத்துவர் சரியான எக்ஸ்ரே முடிவுகளை உறுதிப்படுத்தியதும் மற்றும் நோயாளியிடமிருந்து தேவையான தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டதும், நுன்குழாயானது நீக்கப்படும்.

இதற்கு எவ்வளவு நேரமாகும்?

ஒவ்வொரு நோயாளியின் நிலைமையும் வெவ்வேறானது, மேலும் சிகிச்சை எவ்வளவு சிக்கலானது அல்லது எவ்வளவு நேரடியானது என்பதைக் கணிப்பது எப்போதும் எளிதானதல்ல. சிகிச்சை செய்யப்படும் இடத்தைப் பொறுத்து, உதாரணமாக, காலில் ஒரு பெரிய தமனியைப் பயன்படுத்தினால், இதைச் செய்ய 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை எடுக்கலாம், சிறிய தமனிகளைப் பயன்படுத்தினால், இது மிகவும் சிக்கலானதாகவும் அதிக நேரம் எடுக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஒரு வழிகாட்டியாக எக்ஸ்ரே அறையில் மொத்தம் இரண்டு மணிநேரம் இருக்க வேண்டும், சராசரி ஃப்ளோரோ நேரம் 10 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கிறது.

சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்?

சக்கர நாற்காலி/ஸ்ட்ரெச்சரில் குணப்படுத்துதல் பகுதிக்கு நீங்கள் திரும்பவும் அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் இதயத் துடிப்பு எண்ணிக்கையை அளவிடுதல் மற்றும் இரத்த அழுத்த அளவை சரிபார்த்தல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த செவிலியர்கள் வழக்கமான கண்காணிப்புகளைச் செய்வார்கள். வெட்டு போட்ட இடத்தில் இரத்தப்போக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் கீறலைப் பார்ப்பார்கள். நீங்கள் குணமாகும் வரை பொதுவாக சில மணிநேரம் படுக்கையில் இருப்பீர்கள். நீங்கள் அதே நாளில் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படலாம் அல்லது இரவு முழுவதும் மருத்துவமனையில் வைக்கப்படலாம்.

அப்பல்லோ மருத்துவமனைகளில் உள்ள தினப்பராமரிப்பு ஆஞ்சியோகிராம்கள் நோயாளியின் மகிழ்ச்சியை அதிகரித்தல், மருத்துவமனையில் குறைவான நேரம் தங்க வைத்தல், அதே நாளில் வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு இலகுவான பராமரிப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றன.

முடிவுகள் உங்களிடம் எப்போது கிடைக்கும்?

உங்கள் வருகைக்குப் பிறகு ஸ்கேன் கவனிக்கப்படும் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த அச்சிடப்பட்ட அறிக்கையானது சி.டி ஆக உங்களிடம் கொடுக்கப்படும்.

உங்கள் இரத்த நாளங்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை ஆஞ்சியோகிராம் சுட்டிக்காட்டும். அவை சுட்டிக்காட்டுபவை பின்வருமாறு:

உங்கள் இதய தமனிகள் எத்தனை கொழுப்பு வீக்கத்தால் (தமனி அடைப்பு) அடைக்கப்பட்டுள்ளன அல்லது சுருக்கமடைந்துள்ளன என்பதைக் காண்பிக்கிறது

உங்கள் இரத்த நாளங்களில் அடைப்புகள் உள்ள இடத்தைக் காண்பிக்கிறது

உங்கள் இரத்த நாளங்கள் வழியாக எவ்வளவு இரத்த ஓட்டம் அடைபட்டுள்ளது என்பதைக் காண்பிக்கிறது

முந்தைய இதய பைபாஸ் அறுவை சிகிச்சையின் முடிவுகளை சரிபார்க்கிறது

உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தை சரிபார்க்கிறது

இந்த தகவல்களை அறிந்துகொள்வது உங்களுக்கு எந்த சிகிச்சை சிறந்தது மற்றும் உங்கள் இதயத்தின் நிலைமை உங்கள் உடல்நலத்திற்கு எவ்வளவு ஆபத்தை வைத்திருக்கிறது ஆகியவற்றை தீர்மானிப்பதற்கு உங்கள் மருத்துவருக்கு உதவும். உதாரணமாக, உங்கள் முடிவுகளின் அடிப்படையில், மருத்துவ சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது இதய தமனி பைபாஸ் ஒட்டு அறுவை சிகிச்சை மூலம் நீங்கள் பயனடைவீர்கள் என்று உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.

Quick Book

Request A Call Back

X